ஹிட்லரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய பெற்றோருக்கு நேர்ந்த விபரீதம்

பிரிட்டனின் பேன்பரி நகரைச்சேர்ந்து தம்பதிகளின் குழந்தைக்கு ஹிட்லரின் பெயரை வைத்ததால் சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டனின் பேன்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது அடம் தோமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா பட்டஸ் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்களாவர்.

இவ்விருவருக்கும் வன்முறையை தூண்டும் இனவெறி குறித்த நம்பிக்கைகள் இருந்ததற்கான பதிவுகள் இருப்பதாக நீதவான் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இத் தம்பதிகள் தங்களது குழந்தையின் பெயருக்கிடையில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ஃப் எனப் பெயர் வைத்துள்ளனர்.

இதன் காரணமாக தோமஸுக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் க்ளவுடியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!