சிறுமியின் மூளையில் காணப்பட்ட கட்டி காணாமல்போனது எப்படி- திகைப்பில் மருத்துவர்கள்

அமெரிக்க சிறுமியின் மூளையில் காணப்பட்ட ஆபத்தான கட்டி என காணமல்போனமை மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரொக்சி டொஸ் என்ற 11 வயது சிறுமியின் தலையில் காணப்பட்ட கட்டியே காணாமல்போயுள்ளது

தங்கள் மகளின் தலையில் கட்டி காணப்படுவது குறித்து அறிந்த நாங்கள் ஏதாவது அதிசயம் நிகழாதா என பிரார்த்தித்தோம் அது இடம்பெற்றுள்ளது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இறைவனே மகளை குணப்படுத்தினார் என கருதுகின்றோம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்

இதேவேளை சிறுமிக்கு மருத்துவசிகிச்சை வழங்கி வந்த மருத்துவர்களும் இது குறித்த ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

இது மிகவும் ஆபத்தான நோயாக காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர்கள் இவ்வாறு கட்டி காணாமல்போவது அதிசயமான விடயம் என குறிப்பி;ட்டுள்ளனர்.

எம்ஆர்ஐ ஸ்கானில் பார்த்தவேளை நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன் அதனை காணமுடியவில்லை என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!