அமைச்சரவை பதவியேற்பு ஆரம்பம் – ஊடகங்களுக்கு இருட்டடிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது, மூடப்பட்ட அறைக்குள் இடம்பெற்று வருகிறது.

இன்று முற்பகல் 8.30 மணிக்கு பதவியேற்பு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உரிய நேரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் செயலகத்துக்கு வந்து காத்திருந்தனர்.

எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சுமார் 8.45 மணியளவிலேயே அதிபர் செயலகத்துக்கு வந்து சேர்ந்தார்.

அதன் பின்னர், அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. படங்களை அதிபர் ஊடகப்பிரிவே வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களாகப் பதவியேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினர் மற்றும் அரசியல் வாதிகளும் கூட இந்த நிகழ்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!