மஹிந்த முற்றாக ஒழித்த பாதாள உலகக் குழு தற்போது தலைதூக்கியுள்ளது – செஹான் சேமசிங்க

மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சி காலத்தில் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்ததிலிருந்து தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் மனிதப்படுகொலைகளும் அதிகரித்துள்ளன. பொது மக்களின் பாதுகாப்பு சுதந்திரம் என்பன கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பு கூற வேண்டிய ஐ.தே.க அரசாங்கம் பாதாள உலகக் குழுவினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!