வடக்கில் ஒன்றேகால் இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 123, 862 பேராக அதிகரித்திருப்பதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, வடக்கு மாகாணத்தில் 39,895 குடும்பங்களைச் சேர்ந்த, 123, 862 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில், 25,281 குடும்பங்களைச் சேர்ந்த, 78,528 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில், 10, 318 குடும்பங்களைச் சேர்ந்த 32, 551 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில், 4,257 குடும்பங்களைச் சேர்ந்த 12,642 பேரும், மன்னார் மாவட்டத்தில், 141 பேரும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!