மஹிந்தவின் கோரிக்கை- அமைச்சரவை நிராகரிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்துக்பு மேலதிக செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை. மஹிந்தவின் இந்தக் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரப்பட உள்ளதாக அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மஹிந்தவின் கோரிக்கை குறித்த அமைச்சரவை பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!