சீனாவில் 11 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

சீனாவில் 11 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவின் காங்சூ பகுதியை சேர்ந்தவர் கயோ செங் யாங் எனும் 54 வயதுடைய இவர் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்தார். இவர் 11 பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளார்.

அவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக சிதைத்தார். கொலை செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுமியும் அடங்குவார். இக்கொலை சம்பவங்கள் கடந்த 1988 முதல் 2002-ம் ஆண்டு வரை நடந்தது.

சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்களை பின் தொடர்ந்து இப்படுகொலையை அவர் நிகழ்த்தினார். இவரை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!