“மைத்திரி – மஹிந்த கூட்டணியில் சந்திரிக்கா இணைய வேண்டும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒருபோதும் செயற்பட மாட்டார். சுதந்திர கட்சியின் கொள்கைகளை இன்று யார் பின்பற்றுகின்றார்கள் என்று இவர் கேள்வியெழுப்பியுள்ளார். முதலில் இவர் தனது தந்தையின் அரசியல் கொள்கையினை முறையாக பின்பற்ற வேண்டும். அதன் பின்னரே பிறர் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இன்று ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சி பல்வேறு நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியினை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால். மஹிந்த – மைத்திரி தலைமையிலான கூட்டணியில் ஒன்றினைந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!