13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றும், தாம் அதனை முற்றாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது எந்த விதத்திலும் அரசியலமைப்பு மீறலாகாது எனவும் அவர் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், மாகாணத்திற்குக் கிடைக்கக்கூடிய எல்லா உரிமைகளையும் நடைமுறைப்படுத்துவதற்குத் துறை சார்ந்த அமைச்சுடன் இணைந்து செயலாற்ற விருக்கின்றோம் என்றும் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!