கிணற்றில் நீர் அள்ளிய மாணவி தவறிவீழ்ந்து மரணம்!

வவுனியா – தாலிக்குளம் பகுதியில் நேற்று பாடசாலை சீருடைகளை தோய்ப்பதற்காக தோட்டக் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் கொண்டிருந்த மாணவி தவறுதலாக கிணற்றுக்குள் வீழ்ந்து மரணமானார். 15 வயதுடைய சொக்கலிங்ககுமார் லோபிகா என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார். பெற்றோர் பிள்ளையைக் காணவில்லை என தேடிய சமயத்தில் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலத்தினை மீட்டெடுத்த பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!