அரசின் தோல்விக்கு மைத்திரியும், ரணிலுமே பொறுப்பு – அர்ஜூன குற்றச்சாட்டு!

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் பொதுவான கோரிக்கையாகக் காணப்பட்டது. எனினும், எமது அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியாமல் போனது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் நடைபெற்றிருப்பதாக ஜனாதிபதி கருதினால் அது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு நாமும் ஆதரவளிக்க தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!