கேப்பாப்புலவு மக்களுடன் ஆளுநர் சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களை நேற்று நேரில் சந்தித்துள்ளார். இராணுவம் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்கக்கோரி ஓராண்டுக்கும் மேலாக கேப்பாபிலவு மக்கள் வீதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று முல்லைத்தீவுக்கு வரும் ஜனாதிபதி படையினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்கவுள்ளார். இந்த நிலையிலேயே ஆளுநர் கேப்பாபிலவு மக்களைச் சந்தித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!