தனியாக கழன்று ஓடிய பெட்டிகள் – விபத்தில் இருந்து தப்பியது ரயில்!

வவுனியாவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவளமவுக்கும் ஸ்ராவஸ்திபுரவுக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.இதனால் பயணிகள் எவருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!