பெருவில் பனிப்புயல் தாக்கி 15 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டில் பனிப்புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெருவின் வடகிழக்கு பகுதியில் வீசிய பனிப்புயலில் விடுதியொன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டின் வடகிழக்கு பகுதியில் பலத்த பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் அபுரிமக் பகுதிக்குட்பட்ட அபன்கே நகரிலுள்ள ஒரு பிரபல விடுதியில் இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.

அப்போது, பனிப்புயலின் வேகத்தால் அருகாமையில் இருந்த பாறைகள் மற்றும் மண்கட்டிகள் குறித்த விடுதி சுவற்றின் மீது வீழ்ந்து மோதின. இதன்போது விடுதியின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்ததாகவும் முப்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!