மேலும் 10 சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று எதிர்க்கட்சிக்கு தாவுகின்றனர்?

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று எதிரணிக்குத் தாவவுள்ளனர் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

“கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், வரும் 8ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளனர்.

நாங்கள் யாரும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதே எமக்கு நோக்கம்.

நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அரசாங்கத்துக்கு எதிராக பரப்புரை செய்வோம்.

இன்று மேலும் 10 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு வரவுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!