சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளிக்கும் இந்திய கடற்படையின் டோனியர் விமானம்

கடற்படை மற்றும் விமானப்படைக்குப் பயிற்சிகளை அளிப்பதற்காக, இந்திய கடற்டையின் டோனியர் விமானம் ஒன்று கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா வந்துள்ளது.

வான்வழி அவதானிப்பு பயிற்சி ஒத்திகைக்காகவே, இந்த டோனியர் விமானம் இந்திய கடற்படையினால் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தெற்கு கரைக்கு அப்பால் 10 கடல் மைல் தொலைவில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த இந்த பயிற்சி ஒத்திகை நேற்று வரை நீடித்தது.

அரிதான இந்தப் பயிற்சியில், சிறிலங்கா கடற்படையின் 12 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!