சுதந்திர தினத்த ஏன் புறக்கணித்தேன் : காரணம் கூறுகிறார் மஹிந்த அமரவீர

வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரமடைந்திருந்த போதிலும் எமது நாட்டுக்குள் இன்னும் மக்கள் முழுமையான சுதந்திரத்தைப் பெறவில்லை. அதிகாரத்திலுள்ளவர்கள் அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதிகாரத்தில் இல்லாதவர்கள் அதனைப் பெறுவதற்கும் போராடுகின்றனரே தவிர நாட்டுக்காக யாரும் எதனையும் செய்யவில்லை. இதனாலேயே இம்முறை சுதந்திர தினத்தை புறக்கணித்தேன் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயளாலர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இம்முறை சுதந்திர தினத்தில் கலந்துகொள்ளாமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் சுதந்திர தின வைபவத்தில் நான் தவறாமல் கலந்து கொள்வேன். எனினும் இம்முறை சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்து அதனை புறக்கணித்துள்ளேன். நாங்கள் மாத்திரம் அங்கு சென்று அதில் கலந்து கொள்வதால் ஒரு பயனும் இல்லை. வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றிருந்த போதிலும் எமது நாட்டுக்குள் இன்னும் மக்கள் சுதந்திரமடையவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!