சுதந்திர சதுக்கத்திலும் அமைதிவழி எதிர்ப்புப் போராட்டம்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நேற்றுக்காலை காலி முகத்திடலில் நடந்து கொண்டிருந்த போது, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், அமைதி வழி எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இதில் பங்கேற்றிருந்தவர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரும் அட்டைகளைத் தாங்கியிருந்தனர்.

அத்துடன், வடக்கு, கிழக்கில் இராணுவப் பிடியில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!