மஹிந்த உள்ளிட்ட பலர் சம்பள விவகாரத்தை காட்டி அரசியல் நடத்த முனைகின்றனர் – வடிவேல் சுரேஷ்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பள விவகாரத்தை கொண்டு அரசியல் நடத்த முற்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குற்றம்சாட்டினார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயற்பட்டு அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!