பொதுஜன முன்னணியின் புதிய அதிபர் டிசெம்பர் 9இல் பதவியேற்பார் – பசில்

சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, சிறிலங்காவின் புதிய அதிபர், வரும் டிசெம்பர் 9 ஆம் நாள் பதவியேற்றுக் கொள்வார் என்று அந்தக் கட்சியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் முதலில் நடந்தால் என்று செய்தியாளர் ஒருவர் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பசில் ராஜபக்ச, இல்லை, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் புதிய அதிபர், வரும் டிசெம்பர் 9 ஆம் நாள் பதவியேற்றுக் கொள்வார்” என்று குறிப்பிட்டார்.

பொதுஜன முன்னணியின் புதிய அதிபரின் கீழ், தீவிரமான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!