ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு தொடர்பாக, நாளை மறுதினம் இடம்பெறும் தமது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதுதொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் –
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜெனிவா மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ள நிலையில், அது குறித்து ஆராய வேண்டியுள்ளது.” என்று கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!