11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் கைது

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைச் சிப்பாய் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் பணியாற்றும் 33 வயதுடைய கடற்படைச் சிப்பாயே கைது செய்யப்பட்டவராவார்.

2008-09 காலகட்டத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரில் மூன்று பேரின் கொலைகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!