இந்திய – சிறிலங்கா விமானப்படைத் தளபதிகள் சந்திப்பு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி, இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு பெங்களூருவில் உள்ள ஜலஹங்க விமானப்படைத் தளத்தில் இடம்பெற்றது.

ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி, ஜலஹங்க விமானப்படைத் தளத்தில் இடம்பெற்று வருகிறது. இதனைப் பார்வையிட, சிறிலங்கா விமானப்படைத் தளபதி நேற்று அங்கு சென்றிருந்தார்.

இதன்போது, இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!