முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒத்துழைக்க கோருகிறார் சம்பந்தன்!

வடக்கு மாகாணத்தில் நாளை மறு­தி­னம் திங்­கட்கிழமை முன்­னெ­டுக்­கப்­ப­டும் முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முழுமை­யான ஆத­ரவை வழங்­கும் என்று கட்­சி­யின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் போராட்­டம் தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்ளதாவது-

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் போராட்­டத்­துக்கு அன்று தொடக்­கம் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. அவர்­க­ளின் கோரிக்­கை­கள், நீதி­யா­னவை – நியா­ய­மா­னவை. அவர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­ப­டும் முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு சகல தரப்­புக்­க­ளும் ஒத்­து­ழைக்­க­வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கின்­றேன் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!