தலைமன்னாரில் கைதான இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மன்னார் நீதிவான் ரீ.சரவணராஜா ​நேற்று உத்தரவிட்டார். இந்தியா பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் வியாழக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 5 மீனவர்களும், அவர்கள் பயன்படுத்திய விசைப்படகினையும் கடற்படையினர் தாழ்வுபாடு கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தாழ்வுபாடு கடற்படையினர் குறித்த மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விசாரணைகளின் பின்னர் நேற்று மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதிவான் ரீ.சரவணராஜா உத்தரவிட்டார்.

படகில் இயந்திரக்கோளறு ஏற்பட்டதால், தமது படகு இலங்கை கடற்பகுதிக்கு ஒதுங்கிய நிலையிலே தாம் கைது செய்யப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!