பிளவுபட்ட நாட்டை ஒன்றிணைக்க அரசியல் தீர்வு அவசியம்! – ரணில்

பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்றால் அரசியல் தீர்வு அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ரணில் இதனை குறிப்பிட்டார்.

நாட்டை ஒன்றிணைக்கும் விடயத்தில் அனைத்து மக்களும் சிந்தித்து செயலாற்றும்போதே சிறந்த பயனை அடைய முடியும். அந்தவகையில் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காக பல முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!