2019 ஆம் ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டே, இந்த ஆண்டை இராணுவ ஆண்டாகப் பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இதன் முதல் கட்டமாக, இராணுவ கொடி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொடியை ரணவிறு சேவா அதிகார சபையின் தலைவரான, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!