யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர் – காணிகள் விடுவிப்பு குறித்து வெளியிட்ட கருத்து

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர், வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிட்ட அவர், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

இந்தப் பயணம் தொடர்பாக அவர் கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னமும் காணிகளை விடுவிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!