சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடு- தோற்கடிக்கப்படுமா?

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளன.

இன்று சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமருக்கான ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

சிறிலங்கா அதிபரின் செலவுகளாக 13.5 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 8.2 பில்லியன் ரூபா அபிவிருத்தி செயற்பாடுகளுக்கானதாகும்.

அதேவேளை, சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீட்டை குழு நிலை விவாதங்களின் போது, தோற்கடிக்கப் போவதாக ஐதேகவின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும், வரவுசெலவுத் தி்ட்டத்தை எதிர்த்தாலும், சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!