தோட்ட தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் புதிய சம்பளம் நடைமுறை ; நிதி அமைச்சர்

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டதொழிலாளர்களிற்கு ஏப்ரல் மாதம் முதல் 800 ரூபாய் கிடைக்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்

700 ரூபாயாக காணப்பட்ட மாதாந்த சம்பளம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தப்பட்ட பின்னர் 720 ரூபாயாக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் எனினும் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சம்பள உயர்வை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இதனை 800 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய சம்பளம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ள நிதியமைச்சர் இது ஒருவருடகாலத்திற்கு நடைமுறையில் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!