திருகோணமலைத் துறைமுகத்தில் இரு அவுஸ்ரேலிய போர்க்கப்பல்கள்

அவுஸ்ரேலிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் மூழ்கிய அவுஸ்ரேலியப் போர்க்கப்பலை சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் இணைந்து மீட்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவுஸ்ரேலியக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் கடந்த 11ஆம் நாள் சிறிலங்கா வந்தன.

இந்தக் கப்பல்கள், நேற்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தன.

இந்தக் கப்பல்கள் வரும் 20ஆம் நாள் திருகோணமலை துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்லவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!