கோத்தா எமக்கு சவால் அல்ல! – ஐதேக

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் அல்ல என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சிறுபான்மை கட்சிகளின் வாக்குகளை வெற்றிகொள்வதற்கு கோத்தாபய ராஜபக்வினால் முடியாது. சிறுபான்மையினருடன் ஒரே மேசையில் உணவருந்தினாலும் கடந்த அரசு காலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ சிறுபான்மை மக்களுக்கு இழைத்துள்ள அநீதிகளை அவர்கள் மறக்கமாட்டார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு உள்ள சிறந்த எதிர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷதான். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அவகாசம் ஐக்கிய தேசிய முன்னணிக்கு அதிகமாக உள்ளது.

பொதுஜன பெரமுனவின் பொதுவேட்பாளர் முன்பிருந்தே அரசியலை ஆரம்பித்திருக்க வேண்டும். 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இருந்த ஜனாதிபதி தெற்கு வாக்குகளின் மூலம் மட்டுமே வெற்றிபெற முடியும் என நம்பிக்கை வைத்திருந்தாலும் அதனை தோற்கடிப்பதற்கு எம்மால் முடியும். இனவாதம், மதவாதம், குலவாதத்திற்கு மக்கள் இனியும் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!