வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருப்பதாக, முல்லைத்தீவு, விசுவமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவுக்கு முன்னர் பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி சேவையான தெரணவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
விசுவமடு சிவில் பாதுகாப்பு படைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ரத்னபிரிய பந்துவுக்கு 2018ஆம் ஆண்டு ஜனவரியில் இடமாற்றம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அதிருப்தி காரணமாக பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே இராணுவ சேவையிலிருந்து ரத்னபிரிய பந்து ஓய்வுபெற்றுள்ளார். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலில், வடக்கு அரசியல் களத்தில் குதிப்பதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!