வடக்கு அரசியலில் குதிக்கிறார் முன்னாள் இராணுவ அதிகாரி!

வடக்­கில் மாற்று அர­சி­ய­லுக்கு தலை­மைத்­து­வம் வழங்­கு­வ­தற்கு தயா­ரா­கவே இருப்பதாக, முல்­லைத்­தீவு, விசு­வ­மடு சிவில் பாது­காப்பு படைப் பிரி­வுக்கு முன்­னர் பொறுப்­பாக இருந்த லெப்­டி­னென்ட் கேர்­ணல் ரத்­ன­பி­ரிய பந்து தெரி­வித்­துள்ளார். சிங்­கள தொலைக்­காட்சி சேவை­யான தெர­ண­வுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் இந்த அறி­விப்பை விடுத்­தார்.

விசு­வ­மடு சிவில் பாது­காப்பு படைப்­பி­ரி­வுக்கு பொறுப்­பாக இருந்த ரத்­ன­பி­ரிய பந்­து­வுக்கு 2018ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யில் இட­மாற்­றம் வழங்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில் அதி­ருப்தி கார­ண­மாக பத­விக்­கா­லம் முடி­வ­டை­வ­தற்கு முன்­னரே இரா­ணுவ சேவை­யி­லி­ருந்து ரத்­ன­பி­ரிய பந்து ஓய்­வு­பெற்­றுள்­ளார். இவ்­வா­றா­ன­தொரு பின்­பு­லத்­தி­லேயே அர­சி­ய­லில், வடக்கு அர­சி­யல் களத்­தில் குதிப்­ப­தற்கு விருப்­பம் வெளி­யிட்­டுள்­ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!