எனது குடும்பத்தைப் பழிவாங்குவதற்கே 19ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்தனர்:மஹிந்த

என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள் என மஹிந்த ராஜபக்ஷ தெரவித்தார்.

பாராளுமன்றத்தில் தவறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அளுபோமுல்ல எஸ்.மஹிந்த வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள். அதனூடாக பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குக் காணப்பட்ட உரிமையையும் பறித்துக்கொண்டார்கள். பாராளுமன்றத்தில் தவறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!