ஏமாற்றி விட்டார் கபீர் ஹாசிம்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கபீர் ஹாசிம் 40 வீதிகளைத் திருத்தியமைக்க பணம் கொடுப்பதாக கூறியிருந்தார். வெள்ளம் காய்ந்து வறட்சி வந்தும் எந்த ஒரு அபிவிருத்தியும் முன்னெடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது மிகவும் கவலைக்குறிய விடயம் . ஒரு பகுதியின் அபிவிருத்தியில் பாதை அபிவிருத்தி என்பது முக்கிய இடத்தினை பெற்றுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!