ரணில், மைத்திரியுடன் பேசிய பின்னரே இறுதி முடிவு!

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா – இல்லையா என்பது குறித்து நாளை பிரதமருடனும் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியுடனும், பேச்சு நடத்திய பின்னரே தீர்மானிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

எமக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியான நகர்வுகளை கையாளாவிட்டால் கூட்டமைப்பின் தீர்மானமும் காத்திரமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!