நிதி கிடைத்ததும் 400 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

வலிகாமம் வடக்கில் படையினர் வசமுள்ள மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாகவும், தேவையான நிதி கிடைத்ததும் இந்தக் காணிகளை உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்கு நேற்று காலை ம் சென்ற ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அப்பிரதேசத்தின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார்.இதன் ​போதே பாதுகாப்புத் தரப்பினால் காணி விடுவிப்பு தொடர்பாக இந்த உறுதி மொழி அளிக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!