வயலுக்குச் சென்றவரை வளைத்து தாக்கிய கரடிகள்!

வவு­னியா, பால­மோட்­டை­யில் கர­டி­ தாக்­கியதில், ஒரு­வர் காய­ம­டைந்­துள்­ளார். அவர் சிகிச்­சைக்­காக வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். நேற்­றுக் காலை வய­லுக்­குச் சென்ற 42 வய­து­டைய சிவ­கு­மா­ரன் என்­ப­வர் மீதே கர­டி­கள் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளன. பற்­றை­க­ளுக்­குள் மறைந்­தி­ருந்த 3 கர­டி­கள் தாக்­கு­தல் நடந்­தின என்று கூறப்­ப­டு­கின்­றது. தாக்­கு­த­லால் காய­ம­டைந்த சிவ­கு­மா­ரன், அந்த இடத்­தில் இருந்து ஓடித் தப்­பி­யுள்­ளார். கையில் காயம் ஏற்­பட்­டுள்ள நிலை­யில் தற்­போது வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!