வவுனியா, பாலமோட்டையில் கரடி தாக்கியதில், ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றுக் காலை வயலுக்குச் சென்ற 42 வயதுடைய சிவகுமாரன் என்பவர் மீதே கரடிகள் தாக்குதல் நடத்தியுள்ளன. பற்றைகளுக்குள் மறைந்திருந்த 3 கரடிகள் தாக்குதல் நடந்தின என்று கூறப்படுகின்றது. தாக்குதலால் காயமடைந்த சிவகுமாரன், அந்த இடத்தில் இருந்து ஓடித் தப்பியுள்ளார். கையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!