நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சிறைப்பிடிக்கபட்ட 11 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த அருளப்பர், பால்ராஜ், செல்வம் உள்ளிட்ட 11 மீனவர்கள், கடந்த மாதம் 24ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 11 தமிழக மீனவர்களையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 11 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!