ரயில் தடம்புரண்டதில் 4 பேர் பலி- சீனாவில் சம்பவம்

சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரெயில் ஒன்று நேற்று இரவு கோங்யி நகர் அருகே சரக்கு ரெயில் சென்றபோது திடீரென தடம் புரண்டது.

குறித்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். குறித்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

சரக்கு ரயில் தடம் புரண்டதால் குறித்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. இதையடுத்து அந்த வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!