திருப்பதி பயணத்தை ரத்துச் செய்தார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.

எனினும், அந்தப் பயணத்தை அவர் திடீரென நிறுத்தியிருப்பதாகவும், அவர் சிறிலங்காவிலேயே தங்கியிருப்பார் என்றும் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!