ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வியூகம் தமக்கு தெரியும் – தலதா

அநீதியான வெற்றிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயமாக வெற்றியடையும். வெற்றியை சுவீகரித்து கொள்வதற்கான வியூகம் தமக்கு தெரியுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார்.

பலாங்கொடை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறிய அமைச்சர் அதுகோரள அங்கு மேலும் கூறியதாவது,

இனம் மதம் பேதமின்றி செயற்படுவதே இந்த அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். கடந்து வந்த இந்த நான்கு வருடங்களிலும் எமது அரசாங்கம் வேறுபாடற்ற சேவைகளையே மக்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் எங்களின் செயற்பாடுகளை சிலர் புரிந்துகொள்ள மறுக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!