கட்டுநாயக்கவில் 23 விமானங்கள் தரித்து நிற்க வசதி

SRILANKA-AIRLINES
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆறு புதிய தரிப்பிடங்களைக் கட்டும் பணிகள் வரும் நொவம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று விமான நிலைய அபிவிருத்தித் திட்ட பணிப்பாளர் எஸ்எம்.ரபீக் தெரிவித்துள்ளார்.

2 இலட்சம் சதுர மீற்றர் பரப்பளவில், ஆறு புதிய விமானத் தரிப்பிடங்களை அமைக்கும் பணி 6 பில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் நொவம்பர் மாதம் இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், ஒரே நேரத்தில் 23 விமானங்கள் தரித்து நிற்கக் கூடிய வசதிகள் கிடைக்கும்.

கடுமையான போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க இந்தப் புதிய தரிப்பிடங்கள் உதவியாக இருக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!