வற்றாப்பளையில் சோதனைச்சாவடி மீது மோதியது கன்டர்! – இராணுவ அதிகாரி பலி

முல்லைத்தீவு, வற்றாப்பளைச் சந்தியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து நெடுங்கேணி நோக்கி பயணித்த கன்டர் வாகனம் ஒன்று நேற்று மாலை 5.30 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ சோதனைச்சாவடி மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இலங்கை இராணுவத்தின் 6 ஆவது படைப்பிரிவில் கடமையாற்றும் எச்.பி.எஸ் பத்திரண என்பவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் ஒரு இராணுவ அதிகாரி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!