யாழ்ப்பாணத்தில் கடந்த பல மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று குடாநாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. பிற்பகல் 1.15 மணியளவில் ஆரம்பித்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டித் தீர்த்தது. கடும் வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு இந்தத் திடீர் மழை பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது நேற்று மட்டும் 7.1 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
வடக்கின் இடைநிலைப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதால் தொடர்ந்து மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று வானிலை அவதான நிலையத்தின் யாழ்ப்பாணம் பிராந்தியக் காரியாலயம் தெரிவித்தது
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!