சுதந்திரக் கட்சியினர், பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பதவிகளை வழங்கமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

”தேசிய அரசாங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. எந்தவொரு சூழ்நிலையிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர்களாக சிறிலங்கா அதிபர் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கமாட்டார்.

அத்துடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உள்நாட்டு விவகார அமைச்சர் பதவியை வழங்குமாறு ஐதேக தலைமை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் மறுத்து வரும் நிலையில், அவருக்கு இந்தப் பதவி வழங்கப்படாது” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!