ஒன்பது பேரை கொலை செய்ய திட்டமிட்ட இரு 14வயது மாணவிகள்

ஒன்பது பேரை கொலை செய்ய சதி முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்காவின் புளோரிடாவில் இரு பதின்ம வயது சிறுமிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்

அவொன் பார்க் பாடசாலையை சேர்ந்த 14 வயது சிறுமிகளை கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் கொலைசதி குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் அவர்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கொலைகளில் ஈடுபடுவதற்காக துப்பாக்கிகளை பெறுவது கொலை செய்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்துவது உட்பட பல விடயங்கள் குறித்து குறிப்பிட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களை தற்போது தடுத்துவைத்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஒவ்வொருவரிற்கு எதிராகவும் ஒன்பது கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் கடத்தல் முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படலாம் என தெரிவித்துள்ளனா

ஆசிரியர் ஒருவரே மாணவிகளின் சதி முயற்சியை கண்டுபிடித்துள்ளார்.

ஆவணமொன்றில் கொலை செய்யப்படவேண்டிய ஒன்பது பேரின் பெயர் விபரங்கள் மற்றும் ஆயுதங்களை பெறுவது உடல்களை எரித்து அழிப்பது போன்ற விபரங்கள் காணப்பட்டதை குறிப்பிட்ட ஆசிரியர்கண்டுபிடித்துள்ளார்.

ஒன்பது பேரையும் எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் விரிவான தகவல்கள் காணப்படுகின்றன, என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஒன்பது பேரையும் கவர்ந்து தங்கள் பக்கம் கொண்டு சென்ற பின்னர் அவர்களை கொலை செய்து உடல்களை எரிப்பதற்கான திட்டமிடல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!