சிறிலங்காவில் இரு தேவாலயங்களில் குண்டுகள் வெடிப்பு – பலர் பலி

கொழும்பு- கொட்டாஞ்சேனையில் உள்ள கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலும், நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திலும் இன்று காலை ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்ததில் பலர் கொல்லப்பட்டனர். 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு நாளான இன்று காலை வழிபாடுகளில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்த போதே இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

காலை 8.45 மணியளவில் வெடித்த இந்த குண்டுகளால் பலர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 50இற்கும் அதிகமானோர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்களை அடுத்து, கொழும்பு மற்றும் தென்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெருமளவு சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!