வெடித்து சிதற முன்னர் மனைவியுடன் பேசிய தற்கொலைக் குண்டுதாரி!

தனது கணவன் கோழைத்தனமான தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளார் என்பதை தான் முன்னரே அறிந்திருக்கவில்லை என சினமன் கிரான்ட் நட்சத்திர உணவகத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்ஷாப் அஹமட் என்ற தற்கொலைக்குண்டுதாரியின் மனைவி அக்ஷ்கான் அலாமிதின் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் டெய்லி மெயில் ஊடகத்திற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.

“தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது கணவன் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக கூறினார். இதன்படி, கடந்த வௌ்ளிக்கிழமை அவரை கட்டுநாயக்க விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தோம். தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலையில் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு எனது நலன் தொடர்பில் விசாரித்தார்.

இவ்வாறானதொரு கோழைத்தனமான தாக்குதலுடன் எனது கணவன் தொடர்பு கொண்டுள்ளமை தொடர்பில் முன்னரே அறிந்திருந்தால் , அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருப்பேன். சங்ரில்லா உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் எனது கணவரின் சகோதரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் அக்ஷ்கான் அலாமிதின் மேலும் கூறியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!