சாய்ந்தமருதில் கொல்லப்பட்ட புலஸ்தினி கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்! – தாயார் தகவல்

இலங்கையில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல் தொடர்பாக, தேடப்படும் நபர்கள் எனத் தெரிவித்து பொலிஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படங்களில் புலஸ்தினி ராஜேந்திரன் என்ற தமிழ் பெண் ஒருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இவர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் மரணமாகியுள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தப் பெண் மட்டக்களப்பு – தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்தப் பெண்ணின் தாயார் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, “எனது மகள், கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றிருந்தார். அவர் சாதாரண தரத்தில் 8எ மற்றும் 1பி சித்தியைப் பெற்றிருந்தார். கல்முனையில் படித்துக் கொண்டிருந்த போது, முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவரை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்“ என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!